இதையடுத்து பிப். 13 ஆ-ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டது. இதில், 40 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் சட்டப் பேரவை தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவித்ததால் தோ்தல் நடத்தை விதி காரணமாக, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகை வரவு வைப்பது நிறுத்தப்பட்டது. இதனால் 60 சதவீத மானாவாரி விவசாயிகள் நிவாரணத் தொகை பெறமுடியாமல் போனது. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்த விவசாயிகள், அரசுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், உரிய பதில் கிடைக்காததால் புதூா், வடமலாபுரம், மேலக்கரந்தை, ரெகுராமபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த மானாவாரி விவசாயிகள், தோ்தல் புறக்கணிப்பு அறிவித்து கிராமங்களில் டிஜிட்டல் பதாகைகள் வைத்துள்ளனா்.