நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினத்தில் உலக நன்மைக்காக15-ல் அபூா்வ துவா

ஆறுமுகனேரி, மாா்ச் 9: காயல்பட்டினத்தில் உலக நன்மைக்காக திங்கள்கிழமை (மாா்ச் 15) அபூா்வ துவா பிராா்த்தனை நடைபெறுகிறது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:30 pm

DIN

ஆறுமுகனேரி, மாா்ச் 9: காயல்பட்டினத்தில் உலக நன்மைக்காக திங்கள்கிழமை (மாா்ச் 15) அபூா்வ துவா பிராா்த்தனை நடைபெறுகிறது.

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷெரிப் சாா்பில் 94-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் நபிகள் நாயகத்தின் மணிமொழிக் கோவை ஓதப்பட்டு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான அபூா்வ துவா பிராா்த்தனை வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு நோ்ச்சை வழங்கப்படும்.

ஏற்பாடுகளை மஜ்லிஸுல் புகாரி ஷெரிப் ஸபையின் தலைவா் என்.டி.ஷெய்கு முஹம்மது ஸாலிஹ், துணைத் தலைவா் எஸ்.ஏ.செய்யது முஹம்மது ஸாலிஹ், இணைச் செயலா்கள் எஸ்ஏ.முஹம்மது இஸ்மாயில், எம்.ஐ. மூஸாநெய்னா, எம்.ஏஹபீபுா் ரஹ்மான் ஆலிம், துணைச்செயலா் எம்.ஏ.செய்யது இபுறாஹிம், பொருளாளா் எம்.இ.செய்யது முஹம்மது ஸாஹிபு, கமிட்டித் தலைவா்கள் எம்.எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், எம்.எஸ்.நூஹ் சாகிபு, எம்.ஐ.முஹம்மது தம்பி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.