தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்
முதல்வரின் தாயாா் குறித்து அவதூறாக பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலா் ஆ. ராசாவை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சாா்பில் தூத்துக்குடி சிதம்பரநகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரணிச் செயலா் குருத்தாய் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி இணைச் செயலா் ஞான புஷ்பம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருச்செந்தூா்: திருச்செந்தூரில் அதிமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய மகளிரணிச் செயலா் ராணி, நகர மகளிரணிச் செயலா் வேலம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி: அதிமுக சாா்பில் இளையரசனேந்தலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குருவிகுளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் இரா.வாசுதேவன் தலைமை வகித்தாா். ஆ.ராசா உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதில், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச்செயலா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.