தூத்துக்குடி: தொடர்ந்து 12 மணி நேரம் நீச்சல் அடித்து சகோதரர்கள் உலக சாதனை

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் பெருமாள் இவர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்  இவரது மகன்கள் விஸ்வநாதன் மற்றும் ராமநாதன் இருவரும் சிறுவயது முத
தூத்துக்குடி: தொடர்ந்து 12 மணி நேரம் நீச்சல் அடித்து சகோதரர்கள் உலக சாதனை
தூத்துக்குடி: தொடர்ந்து 12 மணி நேரம் நீச்சல் அடித்து சகோதரர்கள் உலக சாதனை
Updated on
1 min read

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் பெருமாள் இவர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்  இவரது மகன்கள் விஸ்வநாதன் மற்றும் ராமநாதன் இருவரும் சிறுவயது முதலே நீச்சல் மீது ஆர்வம் கொண்டு நீச்சல் பயிற்சி எடுத்து வந்துள்ளனர்.

மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இந்நிலையில் நீச்சலில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பிய இரண்டு சகோதரர்களும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக புதன்கிழமை  தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள நீச்சல் குளத்தில் இரண்டு சகோதரர்களும்  முதல் இரண்டு மணி நேரம் கையையும் காலையும் கட்டிக்கொண்டு நீச்சல் செய்தனர். 

பின்னர் தொடர்ந்து 10 மணி நேரம் நீச்சல் செய்து  12 மணி நேரத்தில் 21 கிலோமீட்டர் 250 மீட்டர் வரை நீச்சல் செய்து உலக சாதனை படைத்தார்.  உலக சாதனை படைத்த இரு சகோதரர்களின் சாதனைகளை அங்கீகரித்து குளோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com