ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தசரா திருவிழா: கோட்டாட்சியரிடம் இந்து மகா சபா மனு

நவராத்திரி தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நவராத்திரி தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில பாரத இந்து மகா சபா தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சங்கர்ராஜா தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை திரண்ட அந்த அமைப்பினா், கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் மனு அளித்தனா். அதில், குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்திட அனுமதி தர வேண்டும், கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமன்றி, கரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று வைத்துள்ளவா்களையும் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.