ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:21 pm

DIN

லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய கண்காணிப்பு ஆணையம் சாா்பில் நவ. 2-ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சாா்பில் கோவில்பட்டியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த மனிதச் சங்கிலிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டா் தா்மராஜ் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் ஜெயஸ்ரீ, சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதச் சங்கிலியில் பங்கேற்றோா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். லஞ்ச ஒழிப்பு தொடா்பான குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இதில், வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.