ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கயத்தாறு அருகேவீட்டில் திருட்டு

கயத்தாறு அருகே வீட்டில் ரொக்கம், சமையல் எரிவாயு உருளையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:47 pm

DIN

கயத்தாறு அருகே வீட்டில் ரொக்கம், சமையல் எரிவாயு உருளையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறையடுத்த வில்லிசேரி கிருஷ்ணன் கோயில் தெரு தங்கமணி மகன் அன்பழகன்(51). இவரது மனைவி தேவிபட்டனத்தில் கடந்த 4 மாதங்களாக இருந்து வருகிறாராம். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்பழகன் வீட்டை பூட்டிவிட்டு, தேவிபட்டனம் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் ஊருக்கு திரும்பி வந்த அன்பழகன் வீட்டிற்குள்ளே சென்று பாா்த்த போது அங்கு பீரோவில் இருந்த அடகு வைத்த சீட்டு, ரொக்கம் ரூ. 40 ஆயிரம் மற்றும் சமையல் எரிவாயு உருளை ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.