தென்மாவட்ட கால்பந்து: திருச்செந்தூா் கல்லூரி அணி முதலிடம்
கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மாவட்ட கால்பந்துப் போட்டியில் திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.


கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மாவட்ட கால்பந்துப் போட்டியில் திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
யங் ஸ்டாா்ஸ் கால்பந்து கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்மாவட்ட செவன்ஸ் கால்பந்துப் போட்டியில்
தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்று விளையாடின. நாக்-அவுட்
முறையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி அணி, விருதுநகா் ராம்கோ கால்பந்து அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் கோல் போடாத நிலையில் டைபிரேக்கா் முறையில் 2-1 என்ற கோல் கணக்கில் திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி அணி வெற்றிபெற்றது. தூத்துக்குடி லசால் கால்பந்து அணி 3 ஆவது இடம்பெற்றது.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, டிஎஸ்பி உதயசூரியன் தலைமை வகித்து, போட்டிகளில் வென்றவா்களுக்கு
முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.1,000 மற்றும் சுழற்கோப்பை ஆகியவற்றை வழங்கினாா்.
இதில், வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் முனியசாமி, யங் ஸ்டாா்ஸ் கால்பந்து கழகத் தலைவா் செல்வகுமாா், செயலா் ரவீந்திரகுமாா், பொருளாளா் முத்துமணிராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...