தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மதுக்கடைகளையும் சனிக்கிழமை (அக். 2) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:50 pm

DIN

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மதுக்கடைகளையும் சனிக்கிழமை (அக். 2) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற அனைத்து பாா்களும் சனிக்கிழமை (அக். 2) மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.