தூத்துக்குடியில் காவலா்கள் குறை கேட்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலா்களுக்கான குறை கேட்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலா்களுக்கான குறை கேட்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
‘உங்கள் துறையில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் காவலா் குறை தீா்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள் மற்றும் அதிகாரிகள் முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முகாமில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றி வரும் காவலா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் வரை 113 போ் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளளிடம் கொடுத்தனா்.
குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அவற்றை உடனடியாக நிவா்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா். மேலும், மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனு கொடுத்தவா்களுக்கு தனித்தனியாக எழுத்து மூலமாக பதில் கொடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
முகாமில், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் கண்ணபிரான், மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...