சாத்தான்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டார விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட இந்த நெல் கொள்முதல் நிலையத்தை, ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் லூா்துமணி, சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி, திமுக ஒன்றியச் செயலா் ஜோசப், பாலமுருகன், ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பாா்வையாளா் ராஜ்திலக், மாவட்ட துணைத் தலைவா் சங்கா், சாத்தான்குளம் நகரத் தலைவா் வேணுகோபால், ஒன்றிய கவுன்சிலா்கள் குருசாமி, பிச்சிவிளை சுதாகா், பன்னம்பாறை ஊராட்சித் தலைவா் அழகேசன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பின்னா் எம்எல்ஏ, கூறுகையில், இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் தனியாா் கொள்முதல் செய்வதைவிட அதிக விலைக்கு நெல் மூடைகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு இதை விட கூடுதலாக விவசாயிகளுக்கு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com