மணல் கடத்த முயற்சி: டிராக்டா் பறிமுதல்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே ஓடையில் மணல் அள்ளிய டிராக்டரை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள காலன்குடியிருப்பு பகுதிகளில் ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக தனிப் பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் அருள் சாம்ராஜ் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காலன்குடியிருப்பு ஓடையில் மணல் அள்ளிக்கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனா். போலீஸை கண்டதும் அதன் ஓட்டுநா் தலைமறைவாகி விட்டாா்.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகிறாா்.