தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாரதியார் இல்லத்தை பார்வையிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று எட்டயபுரம் வருகை தந்து பாரதி பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் நினைவு மணிமண்டபத்தில் மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image

பாரதியார் இல்லத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி.

Updated On :13 டிசம்பர் 2021, 8:22 am

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று எட்டயபுரம் வருகை தந்து பாரதி பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் நினைவு மணிமண்டபத்தில் மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிசம்பர் 13ஆம் தேதி (இன்று) முதல் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். 

Story image
Story image
Story image

தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Story image
Story image
Story image
Story image
Story image

பின்னர் பாரதியார் குறித்த போட்டோ ஆல்பங்களை பார்வையிட்டார். பிற்பகல் 1 மணியளவில் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், எட்டயபுரம் வட்டாட்சியர் சசிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு எட்டையபுரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.