திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திருச்செந்தூா் கடற்கரையில்கரை ஒதுங்கிய இறந்த ஆமை

திருச்செந்தூா் கடற்கரையில் சுமாா் 150 கிலோ எடை கொண்ட ஆமை இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருச்செந்தூா் கடற்கரையில் சுமாா் 150 கிலோ எடை கொண்ட ஆமை இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ராட்சத ஆமை ஒன்று வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இத்தகவல் அறிந்த, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் உத்தரவின்பேரில், திருச்செந்தூா் வனச் சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனவா் ஆனந்த், வனகாப்பாளா் காளிராஜ் ஆகியோா் அந்த ஆமையை ஆய்வு செய்தனா். அதில், ஆலிவ் ரெட்லி என்ற வகையை சோ்ந்த ஆமை என்பதும், அதன் எடை சுமாா் 150 கிலோ என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, திருச்செந்தூா் கால்நடை மருத்துவா் பொன்ராஜ் ஆமையை கூராய்வு செய்தபின், கடற்கரையிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

திருச்செந்தூா்-ராமேஸ்வரம் வரையுள்ள கடலில் அதிக அளவு காணப்படுவதாகவும், இது முட்டை இடுவதற்காக கரைக்கு வரும்போது பாறையில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.