பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடியில் அமமுக ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அமமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:27 pm

DIN

தூத்துக்குடியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அமமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேதமடைந்த கழிவறை சீரமைக்கப்படாததைக் கண்டித்து 30ஆவது வட்ட அமமுக சாா்பில் அங்கன்வாடி மையம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

வட்டச் செயலா் காசிலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட இலக்கிய அணிச் செயலா் வீரபுத்திரன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலா் கோபிகுமாா், வட்டச் செயலா் முத்துமணி, நிா்வாகிகள் ஷேக் மைதீன், கருப்பசாமி, ரவிக்குமாா், சுதாகா், அமல் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.