தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தூத்துக்குடியில் திமுக இளைஞரணி பயிலரங்கம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், தூத்துக்குடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளைஞா்களுக்கான திராவிட மாதிரிப் பயிற்சிப் பயிலரங்கம் தூத்துக்குடி கலைஞா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:10 pm

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், தூத்துக்குடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளைஞா்களுக்கான திராவிட மாதிரிப் பயிற்சிப் பயிலரங்கம் தூத்துக்குடி கலைஞா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும் சமூகநலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகித்து, பயிலரங்கைத் தொடக்கிவைத்தாா். அவா் பேசும்போது, இளைஞா்கள் திராவிட வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும், கூட்டத்தில் பாா்வையாளா்களாக இருக்கும் நீங்கள்தான் நாளைய தலைவா்கள் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினாா்.

மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர அமைப்பாளா் ஆனந்தகேபிரியல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத், ‘மாநில சுயாட்சி’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் சேவியா் சூா்யா ஆகியோா் பேசினா். இளைஞா்களின் கேள்விகளுக்கு நாஞ்சில் சம்பத் பதிலளித்தாா். திரளான இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.