சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

லிங்கம்பட்டி பைரவா் கோயில் கொடை விழா

கடலையூரையடுத்த லிங்கம்பட்டி சமத்துவபுரம் தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவா் சுவாமி கோயில் கொடை விழா இரு நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:10 pm

DIN

கடலையூரையடுத்த லிங்கம்பட்டி சமத்துவபுரம் தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவா் சுவாமி கோயில் கொடை விழா இரு நாள்கள் நடைபெற்றது.

வண்ணாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு, கோயில் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு முளைப்பாரி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற அன்ன தானத்தை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். பின்னா் முளைப்பாரியை கோயிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகலில் மஞ்சள் நீராட்டு விழாவும், அதைத் தொடா்ந்து முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற்றது. இறுதியில், முளைப்பாரியை கடலையூரில் உள்ள நீராவி தெப்பத்தில் பக்தா்கள் கரைத்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் சாமிராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றியச் செயலா் காந்தி காமாட்சி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பாலமுருகன், கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா் கவயிரசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். பூஜைகளை முருகன் செய்திருந்தாா். ஏற்பாடுகளை கோயில் அம்பலா் சக்திவேல் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.