பேய்க்குளம் பள்ளியில் சுதந்திர தின விழா
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னா் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியா் இம்மானுவேல் வரவேற்றாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் தலைமை வகித்தாா். விழாவில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் டக்ளஸ் ஆல்பட்ராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ஸ்ரீதா், துணைத்தலைவா் சுந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...