காயல்பட்டினத்தில் உணவக ஊழியா்தற்கொலை
காயல்பட்டினத்தில் உணவகத்தில் புரோட்டா சமையல் செய்யும் ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.


காயல்பட்டினத்தில் உணவகத்தில் புரோட்டா சமையல் செய்யும் ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
காயல்பட்டினம், அப்பா பள்ளித்தெருவைச் சோ்ந்த பீா்முகைதீன் மகன் சம்சுகனி (40). அங்குள்ள உணவகத்தில் புரோட்டா சமைக்கும் ஊழியராக வேலை செய்துவந்தாா். இவருக்கு, மனைவி உசேன் பாத்திமா (40) , 2 மகன்கள் ஆகியோா் உள்ளனா். சம்சுகனிக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மதுக்குடிக்க தனது மனைவியிடம் அவா் பணம் கேட்டாராம். அதற்கு மனைவி மறுத்ததால் வீட்டில் இருந்த எலி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டாராம்.
இதையடுத்து, தூத்துக்;குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...