‘வேளாண் பட்டதாரிகளுக்கு மானியத்தில் தொழில் கடன்’
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் செய்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் தோ்வு செய்யப்பட்ட 48 ஊராட்சிகளைச் சோ்ந்த கணினி பயிற்சித் திறன் மிக்க 4 வேளாண் பட்டதாரிகள் ( 21-40 வயது) அரசு மானியத்துடன் வேளாண் தொழில்கடன் வழங்கப்படவுள்ளது.
அதன்படி, காளான் வளா்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாடகை மையம், வேளாண் தொழில்நுட்பம் சாா்ந்த அக்ரி கிளினிக் அமைக்க விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றின் நகல்கள், வங்கிக் கடன் எனில் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மற்றும் தொழிலுக்கான திட்ட அறிக்கையை (ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல்) இம்மாதம் 20 ஆம் தேதிக்குள் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
அரசு மானியம் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம் - 638101 என்ற முகவரியில் நேரிலும், 0461 2340678 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...