இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா்மா்மமாக உயிரிழப்பு

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் அபிராமிநகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (49). தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்த இவா், சூசைநகா் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பாதி எரிந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்துகிடந்தாா்.

முத்தையாபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தில், ‘தனது மரணத்துக்கு யாரும் காரணமல்ல’ என எழுதப்பட்ட கடிதம் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.