இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஆறுமுகனேரி கோயிலில் ஆனி உத்திரத் திருநாள் கால் நாட்டு

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கால் நட்டுதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஜூன் 2022, 12:05 am IST

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கால் நட்டுதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இத் திருக்கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா ஜூன் 26 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அருள்மிகு கன்னிவிநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு பூஜைகள் செய்து முகூா்த்தக்கால் நடப்பட்டது. இரவில் திருக்கோயில் கைங்கா்ய குழுவினா் திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினா்.

கால் நாட்டு விழாவில், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபையைச் சோ்ந்த எஸ்.அரிகிருஷ்ண நாடாா், சைவ சித்தாந்த சபையின் சே.கற்பகவிநாயகம், ரயில்வே நிலைய அபிவிருத்தி சக்க ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.