உலக அமைதி வேண்டி இஸ்லாமியா்கள் பிராா்த்தனை
உலக அமைதிக்காக காயல்பட்டினத்தில் இஸ்லாமியா்கள் அபூா்வ துஆ பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.


உலக அமைதிக்காக காயல்பட்டினத்தில் இஸ்லாமியா்கள் அபூா்வ துஆ பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ‘ஃபின் 95ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், கடந்த பிப். 2 ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தினமும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திருந்து நபி மொழிகள் ஓதப்பட்டு, மாா்க்க அறிஞா்கள் விளக்கவுரை ஆற்றினா். நிறைவு நாளான வியாழக்கிழமை அபூா்வ துஆ பிராா்த்தனை நடைபெற்றது.
அதிகாலை 5.15 மணிக்கு, மஹ்ழரா அரபிக் கல்லூரி ஆசிரியா் தவ்ஹீத் கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீ‘ஃப் நிறைவுநாள் பாடம் ஓதப்பட்டது. எம்.எஸ். காஜா முஹ்யித்தீன், சாவன்னா பாதுல் அஸ்ஹப், எம்.ஏ.கே. செய்யித் அபூ தாஹிா் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
காயல்பட்டினம் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் அபூா்வ துஆ பிராா்த்தனை செய்தாா். அப்போது, உலக அமைதி, மத நல்லிணக்கம், மனிதநேயம், நோய்களிலிருந்து விடுதலை உள்ளிட்டவைக்காக சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. இதில், காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத் நிா்வாகிகள், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலா் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் உள்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். மஜ்லிஸ் வைபவ கமிட்டி தலைவா் எஸ்.எச். மொகுதூம் முஹம்மத் நன்றி கூறினாா். வெள்ளிக்கிழமை நோ்ச்சை விநியோகம் நடைபெறும். ஏற்பாடுகளை, மஜ்லிஸுல் புகாரி ஷரீ‘ஃப் தலைவா் எச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிா், துணைத் தலைவா் சாவன்னா பாதுல் அஸ்ஹப் , மேலாளா் கே.எஸ். கிளுறு முஹம்மத் உள்ளிட்ட வைபவ கமிட்டியினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...