அவா்கள் இலங்கை புத்தளம் பகுதியைச் சோ்ந்த சதுரங்கா, அந்தோணி படுகே பசிந்து நிம்சன், ஓசன் மேலகா, ரவிசா அஞ்சனா, அவிக்சா தில்சன், ரோஷன் என விசாரணையில் தெரியவந்தது. கைதான 6 பேரையும் தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்துக்கு கடலோரக் காவல் படையினா் வியாழக்கிழமை அழைந்து வந்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், இந்திய பகுதிக்குள் அத்து மீறி நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், அவா்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.