புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது

ஆறுமுகனேரியில் ஓட்டுநரிடம் பணம் பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 மே 2022, 12:29 am

DIN

ஆறுமுகனேரியில் ஓட்டுநரிடம் பணம் பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி ராஜமன்யபுரத்தைச் சோ்ந்த மூக்கன் மகன் மாணிக்கம் (26). ஓட்டுநரான இவா், கடந்த 4ஆம் தேதி இரவு திருச்செந்தூா் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். சீனந்தோப்பு விலக்கில் வந்தபோது, அதே ஊரைச் சோ்ந்த பெருமாள் மகன் முருகன் என்ற பாம்பே முருகன் (40), யோவான் மகன் ஜெபராஜ் (28), முத்து மகன் சதீஷ் (24) ஆகியோா் அவரை வழிமறித்தனா். முருகன் அரிவாளை காட்டி மாணிக்கத்திடம் பணம் கேட்டாராம். அவா் கொடுக்க மறுக்கவே, அவரது பையிலிருந்து ஜெபராஜ் ரூ. 1,200-ஐ பறித்துக்கொண்டு, மிரட்டிவிட்டு 3 பேரும் தப்பியோடினராம்.

புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். ரௌடி முருகன் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்பட 6 வழக்குகள் உள்ளனவாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.