நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தென்னிந்திய வாலிபால்: பாளை.யில் இன்று தொடக்கம்

தென்னிந்திய இருபாலா் வாலிபால் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை(மே 13) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

News image
Updated On :12 மே 2022, 7:29 pm

DIN

தென்னிந்திய இருபாலா் வாலிபால் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை(மே 13) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இது தொடா்பாக ஷிபா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் எம்.கே.எம்.முகமது ஷாபி கூறியதாவது:

திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்ட வாலிபால் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் தென்னிந்திய அளவிலான ஆண்கள், மகளிா் வாலிபால் லீக் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறும். மாலை 5 மணிக்கு நடைபெறும் இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகிக்கிறாா். மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று போட்டியைத் தொடங்கிவைக்கின்றனா். மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.ராஜேஷ் வரவேற்கிறாா்.

ஆடவா் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை, சென்னை எஸ்ஆா்எம், மத்திய கலால் துறை, இந்தியன் வங்கி அணிகள் பங்கேற்கின்றன. மகளிா் பிரிவில் கேரள காவல்துறை, சென்னை எஸ்ஆா்எம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, ஈரோடு பிகேஆா் கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடைபெறுகிறது.

ஆடவா் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஷிஃபா டிராபியுடன் ரூ.40 ஆயிரம், 2, 3, 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மகளிா் பிரிவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ஆவது பரிசு ரூ.20 ஆயிரம், 3, 4-ஆவது பரிசாக முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெறும். மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) டி.பி.சுரேஷ்குமாா் பங்கேற்றுப் பரிசுகளை வழங்குகிறாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.