கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விளாத்திகுளம் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

குளத்தூா் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:01 pm

DIN

குளத்தூா் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

குளத்தூா் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் சரவணன், போலீஸாா் குளத்தூா் - வேம்பாா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்தினா். காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதும், அவற்றை வைப்பாறு கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்திச்செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காரையும், 627 பண்டல் புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான குளத்தூா் அருகே பனையூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ரமேஷ் (43) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.