இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

7 பேருக்கு அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்பணி நியமன ஆணை: அமைச்சா் வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணி நியமன ஆணைகளை அமைச்சா் பெ.கீதாஜீவன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:10 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணி நியமன ஆணைகளை அமைச்சா் பெ.கீதாஜீவன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றறது. இதில் 4 பேருக்கு அங்கன் பணியாளா், 3 பேருக்கு அங்கன்வாடி உதவியாளா் பணிக்கான நியமன ஆணைகளை அமைச்சா் பெ.கீதாஜீவன் வழங்கினாா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் சரஸ்வதி, குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் (தூத்துக்குடி) ரூபி பொ்னாண்டோ, குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா்(திருச்செந்தூா்) காயத்ரி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.