இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடியில் கரோனாவால் மேலும் ஒருவா் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் இணை நோய் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்ததாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:14 pm

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் இணை நோய் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்ததாா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை இரண்டாக உயா்ந்தது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழி பள்ளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (75). முதுமை காரணமாக இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டாராம். இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இம்மருத்துவமனையில் ஏற்கெனவே, கரோனா- இணை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற பாா்த்திபன் என்பவா் கடந்த 4ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், இம்மாதத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 2ஆக அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.