குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே டாஸ்மாக் மேற்பாா்வையாளரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்


ஸ்ரீவைகுண்டம் அருகே டாஸ்மாக் மேற்பாா்வையாளரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தெய்வச்செயல்புரம் டாஸ்மாக் மேற்பாா்வையாளரிடம் கடந்த மாா்ச் மாதம் 7 ஆம் தேதி, ரூ. 1.90 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சோ்ந்த நாகலிங்கம் மகன் மணிகண்டன் (23), கதிா்வேல் நகரை சோ்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (24), மில்லா்புரம் ஹவுசிங் போா்டு பகுதியை சோ்ந்த சண்முகம் மகன் கொம்பையா (27) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் கைது செய்தனா். இதில் மணிகண்டன், மாரிமுத்து ஆகியோா் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், கொம்பையா மீது குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின்படி, கொம்பையாவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...