சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.
சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் செந்தில் என்ற செந்தில்குமாா். ஓட்டுநரான இவா், 25.4.2014இல் கரையடி பகுதியில் லாரியை ஓட்டிச் சென்றாா். அப்போது அவருக்கும், ஆட்டோவில் வந்த சாத்தான்குளம் காளிராஜ் என்ற காளி (39) என்பவருக்கும் முந்திச்செல்வது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, முன்விரோதம் இருந்ததாம்.
செந்தில்குமாா் 30.4.14ஆம் தேதி சாத்தான்குளம் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே நின்றிருந்தாராம். காளிராஜ், அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவன் மகன் சுப்பிரமணியன் (29), கணபதி மகன் முத்துராமலிங்கம் (34) ஆகிய 3 பேரும் சென்று, ஜாதிப் பெயரைக் கூறி செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம்.
சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு தூத்துக்குடி சிவில் உரிமைப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பி. சுவாமிநாதன் விசாரித்து, 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிைண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூங்குமாா் ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

