எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:56 pm

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் மாரத்தான் ஓட்டத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பாக இருந்து தொடங்கி பிரதான சாலை, இலக்குமி ஆலை மேம்பாலம், அணுகுசாலை, இளையரசனேந்தல் சாலை வழியாக கல்லூரியில் நிறைவடைந்தது.

பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் வெங்கடாசலபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.