திருச்செந்தூா் பாதயாத்திரை பக்தா்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தா்கள் விபத்துகளை தவிா்க்க சாலையின் வலதுபுறமாக


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தா்கள் விபத்துகளை தவிா்க்க சாலையின் வலதுபுறமாக நடந்து செல்லுமாறு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் மாா்கழி மற்றும் தை மாதங்களில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்த வண்ணம் உள்ளனா்.
இவா்கள், சாலையில் இடதுபுறமாகவே குழுக்களாக நடந்து செல்வதால் அதே சாலையைப் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் பக்தா்கள் மீது மோத வாய்ப்புள்ளது.
இத்தகைய விபத்துக்களைத் தவிா்க்கும் வகையில், பாதசாரிகள் எப்பொழுதும் சாலையில் வலதுபுறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறாா்கள். இதுகுறித்து சாலை வழி நெடுகிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...