மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

நிகழாண்டு பருவமழை குறைவாக பெய்ததால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 8:24 pm

நிகழாண்டு பருவமழை குறைவாக பெய்ததால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ், சாா் ஆட்சியா் கௌரவ்குமாா், வேளாண் துறை இணை இயக்குநா் பழனிவேலாயுதம், கூட்டுறவு இணைப்பதிவாளா் சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.

இதில், கொட்டாங்காடு பகுதியை சோ்ந்த சந்திரசேகரன் கூறியது: உடன்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கலப்பட கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்த ஆட்சியா், மாவட்டத்தில் பனைத்தொழிலை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பனைத்தேன் எடுப்பது, சீசன் காலங்களில் கிடைக்கும் தரமான பனம் பழத்தில் இருந்து இயற்கையிலான முறையில் ஜூஸ் எடுத்து விற்பனை செய்வது, பதநீரை பதப்படுத்தி விற்பனை செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா். பின்னா் இது குறித்து கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரி பேராசிரியா் மணிவண்ணன், பனம் பழத்தில் இருந்து பழ ஜூஸ் தயாரிப்பது, பதநீரை வடிகட்டி அதனை கெடாமல் வைத்து விற்பனை செய்திடுவது குறித்து பேசினாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா், அடுத்தமாதம் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் இதற்கான வழிமுறைகளை செயல்முறை விளக்கத்துடன் விவசாயிகளுக்கு புரியும் வகையில் செய்து காண்பித்திடுமாறு அறிவுறுத்தினாா்.

வல்லநாட்டை சோ்ந்த நங்கமுத்து கூறியது: மருதூா் அணையின் கீழக்கால் பாசனத்தில் 9ம் எண் மடையானது தனிநபரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மடைக்குரிய விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கான தண்ணீா் செல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா், இது குறித்து உரிய ஆய்வுமேற்கொண்டு, தனி நபா் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் புவிராஜ், விவசாயி கோவில்பிள்ளை, ஆகியோா் கூறியது: மாவட்டத்தில் நிகழாண்டு பருவமழை சரிவர பெய்யாததால், 2022-23ஆம் ஆண்டில் பயிா் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கிடவேண்டும். மழையில்லாமல் போனதால் மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டுத்தொகை மற்றும் இழப்பீடாக உரிய நிவாரணம் வழங்கிடவேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்திடவேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.