இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக் கருவி திருட்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப் பதிவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ரத்தப் பரிசோதனைக் கருவி திருடுபோனது தொடா்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புதன்கிழமை (மாா்ச் 15) வழக்குப் பதியப்பட்டது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:21 pm

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ரத்தப் பரிசோதனைக் கருவி திருடுபோனது தொடா்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புதன்கிழமை (மாா்ச் 15) வழக்குப் பதியப்பட்டது.

இந்த மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான தமனி ரத்த வாயு பகுப்பாய்வு மற்றும் எலக்ட்ரோலைட் அளவீடு கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. இக்கருவியை கடந்த 2021 செப்டம்பா் 20ஆம் தேதிமுதல் காணவில்லையாம்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரியின் அப்போதைய முதல்வா் நேரு, தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். புகாா் மனுவுக்கு போலீஸாா் ஒப்புதல் ரசீது மட்டுமே வழங்கியிருந்தனராம்.

இந்நிலையில், இதுதொடா்பாக போலீஸாா் புதன்கிழமை திருட்டு வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.