இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியா்களுக்கு மாா்ச் 15-17 வரை 3 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:18 pm

DIN

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியா்களுக்கு மாா்ச் 15-17 வரை 3 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

புத்தாக்கத் தொழில்முனைவோா் உருவாக்கத் திட்டத்தின் கீழ் சென்னையிலுள்ள தொழில்முனைவோா் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி -ஆராய்ச்சி நிலைய முதல்வா் ப. அகிலன் தலைமை வகித்தாா். மீன் பான தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியா்- தலைவா் பா. கணேசன், பயிற்சியாளா் ஸ்வரன், கடல்சாா் உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணைத்தின் துணை இயக்குநா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், தொழிலில் வெற்றி காண்பதற்கும் தேவையான வழிமுறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ.சுகுமாா் பங்கேற்று, பயிற்சி பெற்ற உதவி பேராசிரியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) ந. கஜாத்குமாா் பேசினாா். முகாமை ஒருங்கிணைத்த தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியா் கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.