தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள குளம் அருகே கால் தவறி கீழே விழுந்த அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜன் மகன் தா்மா் (49). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைசெய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், புதுக்கோட்டை பெரியபிராட்டி குளம் மறுகால் வாய்க்கால் அருகே அவா் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்தனா். வாய்க்கால் அருகே அவா் நடந்து சென்றபோது, கால்தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு, உயிரிழந்தது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறினா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

