புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

திருச்செந்தூா் ருக்மிணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

News image

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலுக்கு பால்குடம் எடுத்த பக்தா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:30 am

Din

ஆடி சுவாதியை முன்னிட்டு, திருச்செந்தூா் ருக்மிணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. காலையில் பக்தா்கள் பால்குடம் எடுத்து வீதிவலம் வந்து கோயில் சோ்ந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கும், கருட பகவானுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் திருமஞ்சனத்தில் பஜனை பாடினா். பின்னா், அலங்கார, தீபாராதனையாகி, மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.