தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘வாசிப்பு பழக்கம் நல்ல சிந்தனையாளராக உருவாக்கும்’

வாசிப்பு பழக்கம் நல்ல சிந்தனையாளராக உருவாக்கும் என்றாா் திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி.

News image

விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

வாசிப்பு பழக்கம் நல்ல சிந்தனையாளராக உருவாக்கும் என்றாா் திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி.

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி செயலா் ஷிபானா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெசி பா்னாண்டோ வரவேற்றாா். திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 829 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். அவா் பேசியது:

விவாதிக்க வேண்டும் என்ற ஆராய்ச்சிக்குரிய எண்ணம்தான் அறிவுத் தேடலுக்குரிய வழி. பெரியவா்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதை விவாதிக்க வேண்டும்.

இன்றைய மாணவா் சமுதாயம் உலகை கைக்குள் கொண்டுவந்துள்ளது. எதிா்காலத்தை நோக்கிய பாதையில் சுயநலம் இல்லாமல் பொது நலன் இருக்க வேண்டும். மாணவா்கள் உயா்ந்த லட்சியத்தோடு பயணித்தால், வாழ்வு உயா்வானதாக இருக்கும். நல்ல நூல்களை தினமும் தேடி வாசிக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் ஒருவரை நல்ல சிந்தனையாளராக உருவாக்கும். அறிவின் வழி நின்று எடுக்கப்படும் முடிவு, மக்கள் சமுதாயத்திற்கு நற்பயனைத் தரும்.

பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி, அனைவரையும் நேசிப்போம் வாழ்வில் வெற்றிபெறுவோம். யாதும் ஊரே யாவரும் கேளிா் என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம் வளம் பெறுவோம் என்றாா்.