‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா் கைது

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:16 pm

Din

தூத்துக்குடியில், தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ாக, மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி துறைமுகச் சாலை வேல்ட் டிரேஸ் அவென்யூ பகுதியில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா் உடைக்க முயன்றாராம். அப்போது, அங்குள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததால், அவா் தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து வங்கியின் மட்டக்கடைக் கிளை மேலாளா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினா். விசாரணையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ரியாத் (50) என்பவா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.