சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வீடு கட்டும் திட்டம்: நாளை கூட்டுறவு வங்கி கடன் முகாம்

Updated On :30 ஆகஸ்ட் 2024, 4:32 am IST

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சிறப்பு கடன் வழங்கும் முகாம் தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாா், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூா் ஆகிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் சனிக்கிழமை (ஆக.31) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இம்முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ஆணைப்படி, மத்திய கூட்டுறவு வங்கி கிளைமேலாளா்கள், அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா். இத்திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் அதற்கான ஆணை அசல், ஆதாா் அட்டை நகல், மூன்று புகைப்படங்கள், ஜாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் நடுக்காட்டு ராஜா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.