அருப்புக்கோட்டையில் தோ்தல் வாக்குறுதிப்படி, விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை கோபாலபுரம் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு திங்கள் கிழமை தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில செய்தி தொடா்பாளா் ரா. ராம்பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், கடன் பிரச்னையிலிருந்து விடுபடவும் அரசு உடனடியாக கடன் தள்ளுபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், ராமானுஜபுரம் அருள் பிரகாஷ், கோபாலபுரம் சொக்கப்பன், புளியம்பட்டி ராமஜெயம், கிருஷ்ணாபுரம் ராமசாமி, நரிக்குடி சுரேஷ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பின்பு கூட்டுறவு சங்கச் செயலளரிடம் கடன் தள்ளுபடி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.










