FOLLOW US

ON GOOGLE DISCOVER

தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்றால்... ஆர்பிஐ அறிவுறுத்தல்!

வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று யாராவது சொன்னால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.

News image

ஆர்பிஐ அறிவுறுத்தல் - file photo

Updated On :8 ஆகஸ்ட் 2026, 10:08 am IST

உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு மாறாக உங்களுக்கு பணம் தருவதாக யாராவது சொல்கிறார்களா? அப்படி என்றால், எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் பல்வேறு சைபர் குற்றங்களும், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடிகளின்போது, பணப் பரிமாற்றம் நடந்த வங்கிக் கணக்கை வைத்து குற்றவாளிகளைப் பிடித்து விடலாம் என்பதால், இதுபோன்று மோசடிக் கும்பல்கள், அப்பாவி மக்களிடம் உங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு பணம் தருகிறோம் என்று கூறி ஏமாற்றி, அவர்கள் வங்கிக் கணக்கு மூலம் பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில், ஆர்பிஐ மக்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்காக யாராவது உங்களுக்கு சுலபமாக பணம் தருவதாகச் சொல்கிறார்களா?

அவர்கள் சட்ட விரோதமாக பணத்தை பரிமாற்றுபவர்களாக (money mule) இருப்பார்கள், அவர்களுக்கு உதவு செய்பவர்களாக நீங்கள் இருக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளது.

பணம் பரிமாற்றுபவர் (money mule) சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை ஒருவர் சார்பாக மற்றவர்களுக்குப் பரிமாற்றம் செய்பவர் ஆவார். எனவே, உங்கள் வங்கிக் கணக்கைக் கொடுத்து குற்றவாளியாக மாற வேண்டாம்.

உங்கள் வங்கிக் கணக்கு = உங்கள் பணம்

  • பணம் பரிமாற்றம் செய்வதற்காக உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

  • உங்கள் வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தைப் பெறவோ அல்லது அனுப்பவோ அனுமதிப்பது உங்களைச் சிறைக்கு அனுப்பக்கூடும்.

அதுபோல, குற்றவாளியும் ஆகாதீர்கள், ஓடிபியை பகிர்ந்து ஏமாளியும் ஆக வேண்டாம்.

  • உங்கள் வங்கி விவரங்கள், ஓடிபி அல்லது கடவுச்சொற்களை எப்போதும் யாருடனும் பகிராதீர்கள்.

  • உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாத்திடுங்கள். அது நேரடியாக உங்களைப் பாதுகாத்திடும் முறை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சுலபமாக பணம் சம்பாதிப்பது ஆபத்தில் முடியலாம். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் rbikehtahai.rbi.org.in

ஆர்பிஐ சொல்கிறது - விவரமாக, எச்சரிக்கையாக இருங்கள் என்று அந்த தகவலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.