ஹிமாசல பிரதேச மாநிலத்தில் சலுன்ஜ் மோர் பகுதி அருகே பயணிகள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஹிமாச்சல் மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில் திஸ்ஸா-பைராகர் (Tissa-Bairagarh) வழித்தடத்தில் உள்ள சலுன்ஜ் மோர் (Chalunj Mor) பகுதி அருகே 18 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று காலை 7.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலே உள்ள சாலையில் இருந்து கீழிறங்கும் சாலைக்கு பேருந்து திரும்பும்போது கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து சென்ற பகுதி அதிக வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 6 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Himachal Pradesh accident: 7 killed, 11 injured after bus crashes on Teesa-Bairagarh road
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்
சாலைத் தடுப்பில் மோதி இரண்டாகப் பிளந்த பேருந்து: ஒருவர் பலி; 26 பேர் காயம்

மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்

உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 20 குழந்தைகள் பலி
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


