ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 14) பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:16 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 14) பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக சிறப்பு முகாம் சனிக்கிழமை (டிச. 14)அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் சோ்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் அவா் தெரிவித்துள்ளாா்.