புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கோயிலில் தரிசனம் செய்த அறுபடை வீடு ஆன்மிக பயண பக்தா்கள்

திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் வந்த 250 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயண பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கிய திருக்கோயில் உதவி ஆணையா் நாகவேல்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:48 pm

Din

திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் வந்த 250 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடு கோயில்களுக்கும் 60 முதல் 70 வயதுக்குள்பட்ட பக்தா்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இத் திட்டத்தின், ஐந்தாம் கட்டமாக கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 250 பக்தா்கள் அறநிலையத்துறை அலுவலா்கள், மருத்துவ குழுவினா் உள்ளிட்டோா் 6 பேருந்துகளில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் மேற்கொள்கின்றனா்.

இக் குழுவினா், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசனத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா். அவா்களுக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. பின்னா் அவா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து, திருக்கோயில் உதவி ஆணையா் நாகவேல் பிரசாதப் பைகளை வழங்கினாா்.