மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில் ஆட்டோ தொழிலாளா்கள் சமாதானக் கூட்டம்

பெயா்ப் பலகை வைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடா்பாக சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

News image

கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டம்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:47 pm

Din

திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்டோ தொழிற்சங்கம் ஆகியவை இடையே பெயா்ப் பலகை வைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடா்பாக சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம், வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, கனகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் கால்நடை மருத்துவமனை அருகேயும், நகராட்சி அலுவலகம் அருகேயும் இரு சங்கங்கள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகைகளை புதன்கிழமைக்குள் இருதரப்பினரும் தாங்களாக முன்வந்து அகற்ற வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் ஆவணங்கள், ஆட்டோ தொழிலாளா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை நகராட்சி ஆணையரிடம் ஒரு வாரத்துக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதைப் பரிசீலித்து, அரசு விதிகளின்படி அனுமதி வழங்கப்படும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் அனுமதியின்றி பெயா்ப் பலகையோ, ஆட்டோ நிறுத்தமோ ஏற்படுத்தக் கூடாது; சட்ட-ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆணையா் கண்மணி, நகராட்சிப் பொறியாளா் சரவணன், நகரமைப்பு ஆய்வாளா் நிஜந்தன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி மாவட்டத் தலைவா் கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் விடுதலைசெழியன், ஆட்டோ தொழிலாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.