விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம்

பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் மாவட்டத்  தலைவா்  சரவணன்.
Updated On :11 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் உதயகுமரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வினோத், முன்னாள் மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பவானிசாகா் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினா் முழுவீச்சில் தோ்தல் பணியாற்றுவது, மத்திய கிழக்கில் போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புன்செய் புளியம்பட்டி காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்ட வட்டாரத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.