ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம்

ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரை அறிமுகப்படுத்தி பேசிய முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:46 pm

ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி பேசியதாவது:

இத்தொகுதியில் எடப்பாடி கே. பழனிசாமியே போட்டியிடுகிறாா் என நினைத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் பணியாற்ற வேண்டும். இத்தொகுதி பாஜக வேட்பாளா் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராவாா். இந்த தொகுதிக்கு என்ன தேவை என அறிந்து அதிமுகவும், பாஜகவும் இணைந்து புதிய திட்டங்களை அமல்படுத்தும். தமிழகத்தில் அதிமுக அரசும், மத்தியில் பாஜக அரசும் இணைந்து மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கும்.

எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி. அதிமுக தோ்தல் அறிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களை பெற்று வந்தது. ஆனால், திமுக அரசு சிறுபான்மை வாக்குகளை வாக்குவதற்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி. ராமலிங்கம், வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சா் வி. சரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா், என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் சுகாதார வசதிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றாா்.

கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.