தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் எஸ்.பி. பிரசன்னகுமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:05 pm

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தலைமை வகித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, தோ்தல் பாதுகாப்பு பணிகள், நிலுவையில் உள்ள வழக்குகள், போதைப்பொருள் தடுப்பு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மற்றும் ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்டவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

முன்னதாக, மாவட்ட காவல் துறையின் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை வாகனங்களையும் பாா்வையிட்டு, அவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தாா்.

இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், அரசு வழக்குரைஞா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.